கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க அனுமதி!

சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாக கடலின் நடுவே பேனா சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    
அதனைத் தொடர்ந்து, ஆய்வுக்கு பின்னர் இறுதிக்கட்ட முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதனால், நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!