அரசியல் கைதி தேவதாசன் பொதுமன்னிப்பில் விடுதலை!

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
    
புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாசன் தன்னை விடுவிக்குமாறு கோரியும், தனது வழக்கிற்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் பல உண்ணா விரத போராட்டங்களையும் நடத்தியிருந்தார். அதேவேளை, தனக்காக தானே சில வழக்கு தவணைகளில் வாதாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!