கனேடியத் தூதரகம் முன்பாக சிங்கள ராவய அமைப்பு போராட்டம்!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கொழும்பில் உள்ள கனேடியத் தூதரகத்திற்கு முன்பாக, சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
    
கனடாவிற்கும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கும் எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போர்க்குற்றத்தை இராணுவத்தினர் செய்யவில்லை என்றும், புலிகளே போர்க்குற்றத்தைச் செய்தனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!