கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு: வெளியான அறிவிப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (27.06.2023) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06.2023) காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் நோக்கில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.




* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!