நண்பனை கொன்று ரத்தத்தை குடித்த நபர்: சொன்ன அதிரவைக்கும் காரணம்!

தன் மனைவியுடன் ரகசிய தொடர்பில் இருந்த நண்பனை ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தை அறுத்த கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய் (35). இவருடைய மனைவி மாலா (28). விஜய் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய நண்பர் மாரேஷ் (32). இவரும் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
    
தொழில் ரீதியாக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். இதற்கிடையில், மாரேஷுக்கும், விஜய்யின் மனைவி மாலாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் உறவு விஜய்க்கு தெரிய வந்ததும், மனைவி மாலாவை விஜய் கண்டித்துள்ளார். ஆனால், மாலா கணவர் சொல்வதை கண்டுக்காமல் மாரேஷுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த விஜய், கடந்த 19ம் தேதி மாரேஷுக்கு போன் செய்து மது அருந்த வருமாறு கூறியுள்ளார். அப்போது, யாரும் இல்லாத பகுதிக்கு மாரேஷை விஜய் அழைத்து மது அருந்த வைத்துள்ளார். போதை தலைக்கேறியதும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் விஜய் மாரேஷின் கழுத்தை அறுத்தார்.

ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிய மாரேஷை தன் நண்பர்களிடம் வீடியோ எடுக்கக் கூறியுள்ளார். இதன் பிறகு, அங்கிருந்து அனைவரும் தப்பியோடிவிட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் மாரேஷை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாரேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் கொடுத்த தீவிர சிகிச்சையால் மாரேஷ் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, போலீசார் விஜய்யை உடனடியாக கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!