கனேடிய மாகாணத்தை தாக்கிய புயல்! July 3, 2023 9:58 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவின் கியூப் மாகாணத்தில் கடுமையான புயல் காற்று மழை வெள்ளம் காரணமாக பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புயல் காற்று தாக்கத்தினால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இரண்டு பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. புயல் காற்றினால் வீதியில கிடந்த பொருட்களை அகற்றுவதற்கு முயற்சித்த போது நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கியூப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்று வீசியதாகவும் இதனால் பல வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சீரற்ற காலநிலை காரணமாக ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரிய அளவிலான ஆலங்கட்டிகள் விழுவதை முதல் தடவையாக தாம் பார்த்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இதேவேளை, மொன்றியலிலும் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…