சீனாவில் மார்பகங்களுக்குள் பாம்புகளை மறைத்துவைத்து கடத்த முயற்சித்த பெண்!

தன்னுடைய மார்பகங்களுக்குள் ஐந்து பாம்புகளை மறைத்துவைத்து கடத்துவதற்கு முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபுக்சியன் துறைமுகத்தில் இருந்து ஹொங்கொங்குக்கு செல்ல முயன்ற போதே ஷென்சென் சுங்க அதிகாரிகளால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
ஃபுக்சியன் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் நுழையும் போது பெண்ணொருவர் வினோதமான உடல் வடிவத்துடன் இருப்பது சுங்க அதிகாரிகளின் கண்களுக்குத் தென்பட்டது.

அவரது அசாதாரண உடல் வடிவம் காரணமாக, சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனையிட்டபோது ​​​​அவரது மார்பில் 5 உயிருள்ள பாம்புகள் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
குறித்த பெண்ணின் அடையாளம் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐந்து பாம்புகளையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!