இலவச வைத்திய சேவை நாட்டுக்கு ஆபத்து: அரசு மீது விமல் சீற்றம்

சுகாதாரத்துறைமீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர், மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், நடைமுறையில் நிலமை எதிர்மறையாக உள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் நடுத்தர மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இலவச சுகாதார சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு நெருக்கடி தோற்றம் பெற்றவுடன் அவசர கொள்வனவு முறையில் திறந்த விலை மனுக்கோரல் இல்லாமல் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!