கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர உரித்து இல்லை! – சம்பந்தன்

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யைக் கோரு­வ­தற்­கான உரித்து கூட்டு எதி­ர­ணிக்கு இல்லை. அர­சாங்­கத்தில் அமைச்சர்­க­ளாக அங்கம் வகித்­துக் ­கொண்டு அதே­ கட்­சியை சேர்ந்­த­வர்கள் உத்­தி­யோ­கப்­பூர்வ எதிர்க்­கட்­சி­யாக இருக்க முடி­யாது. இதற்­கேற்­ற­ வ­கை­யி­லேயே கூ்ட்டு எதி­ர­ணியின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை தமக்கு வழங்­க­வேண்­டு­மென்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கூட்டு எதி­ர­ணி­யினர் கோரி வரு­கின்­றனர். இதற்­கான கடி­தத்­தையும் சபா­நா­ய­க­ரிடம் அவர்கள் கைய­ளித்­துள்­ளனர். கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரான தம்­மிடம் 70 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கையில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கொண்ட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ள­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று கூட்டு எதி­ர­ணி­யினர் வாதிட்­டு ­வ­ரு­கின்­றனர். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­ன் கருத்து தெரி­விக்கையில்-

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை கோரும் உரித்து கூட்டு எதி­ர­ணிக்கு இல்லை. அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக அங்கம் வகிக்கும் கட்­சி­யொன்றின் உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை வகிக்க முடி­யாது. கூட்டு எதி­ர­ணி­யி­னரின் நிலைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கது அல்ல. அர­சாங்­கத்­திலும் அங்கம் வகித்­துக் ­கொண்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யை கோர முடி­யாது. இத­னால்தான் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வி­யை வழங்க முடி­யாது என்ற தீர்­மா­னத்­திற்கு சபா­நா­யகர் வந்திருக்கின்றார்.

கூட்டு எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான செயற்பாடாகவே உள்ளது. எனவே இந்த விடயத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமானதாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!