மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 70,000 க்கும் மேற்பட்ட கனேடியர்கள்! July 24, 2023 9:27 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கன மழை தொடரும் நிலையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இப்படியொரு மழை கனேடிய மாகாணங்களில் பெய்தது இல்லை என கூறப்படுகிறது. மழை காரணமாக இரு சிறார்கள் உட்பட நால்வர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு ஆபத்தான சூழல் நீடிப்பதால் மாயமானவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை பாதிப்பால் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர் என கூறப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…