வாயில் துணியை கட்டி விவசாயிகள் போராட்டம்!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காய் கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    
18-வது நாளான நேற்று விவசாயிகள் தலையில் தேங்காயை சுமந்தும், பச்சை துண்டால் வாயை கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் மந்திரகிரி மாசிலாமணி, தேவராஜ், கார்த்தி, பரமேஷ்வரன் உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!