அரசியல் ஏமாற்று வித்தை: ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாடானது, அரசியல் ஏமாற்று வித்தையெனில் அதிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி வெளியேறும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (26.07.2023) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் பற்றி எமக்கு இன்னும் தெரியாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!