சிறைச்சாலைகளில் கைதிகளின் நெருக்கடி அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெருக்கடி வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி உள்ளது. எனினும், தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 29,000-ஐ அண்மித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது 200% அதிகரிப்பாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!