ரொஷான் ரணசிங்கவின் அமைச்சர் பதவியை பறிக்க முடிவு! August 5, 2023 9:11 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளதாகவும், இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை 7 ஆம் திகதி தன்னை சந்தித்து விளக்கமளிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஜனாதிபதி இந்த அறிவித்தலை அமைச்சருக்கு வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த அமைச்சரவைக் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறித்ததன் காரணமாகவே அமைச்சர் ரொஷான் ரணசிங்க மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் விவசாயியின் மகன் என்ற வகையில் தாம் அதிர்ச்சியடைவதாகவும், தண்ணீர் திறக்கப்படாததால், பல விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…