அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாம் தயார் – சஜித் August 9, 2023 9:28 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றால் அந்த பேச்சுவார்த்தையில் தலையீடு செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அது நாட்டுக்கு நலனை ஏற்படுத்தியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும் அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்த காரணத்தினால் தொழில்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…