“தமிழர்கள் இந்தி கற்க வேண்டும்” – அமித்ஷா வலியுறுத்தல்! August 15, 2023 5:44 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பட்டங்களை வழங்கி பேசியதாவது:- ‘அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாப்பதும், உயர்த்துவதும் பட்டம் பெறும் உங்கள் அனைவரின் கடமை. காரணம், அவைதான் நமது கலாசாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணத்தை கொண்டிருக்கின்றன. நாம் நமது மொழிகளை வலுவாக ஆக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கை 2020-ன் முக்கியமான அம்சம், குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியை பயிற்றுவிப்பது. குழந்தைகள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை கற்க வேண்டும். ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒரு குழந்தை குஜராத்தி மொழியுடன் இந்தியையும், அசாமை சேர்ந்த குழந்தை அசாம் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும். அதேபோல, தமிழர்கள் தமிழுடன் இந்தி மொழியை கற்க வேண்டும்.இவ்வாறு நடந்தால், நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. இங்கு பட்டம் பெற்றோர், அவர்களது சமஸ்கிருத அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது உபநிஷதங்களிலும், வேதங்களிலும், சமஸ்கிருத மொழியிலும் அறிவுச்செல்வம் நிறைந்திருந்திருக்கிறது. அவற்றை நீங்கள் கற்கும்போது, வாழ்வின் எந்த பிரச்சினையும் உங்களுக்கு பிரச்சினையாகவே இருக்காது’ என்று அவர் கூறினார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…