செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    
அங்கிருந்து செங்கோட்டை சென்றதும், முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடி, 21 குண்டுகுள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார். ஹெலிகொப்டரில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்ட நிலையில், பிரதமர் கொடியேற்றினார்.

இந்நிலையில் பிரதமர் டுவிட்டரில், சுதந்திர தின வாழ்த்துகள், சுதந்திர போராட்ட வீரர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம், ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!