குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் தமிழக பெண்கள்!

தமிழகத்தில் குழந்தைகளை 500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து தெருக்களில் பிச்சை எடுக்கும் பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரமான சென்னையில் ஆரம்பித்து எந்த இடம் என்றாலும் மக்கள் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
    
அவர்கள், பஸ்கள், ரயில்கள், சிக்னல்கள், சாலைகள், பீச் உள்ளிட்ட பல இடங்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆடி அமாவசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டம் மற்றும் காவிரிக்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்டத்தை பயன்படுத்த பெண்கள் பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது, இந்த இடத்தில 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பெண்களை விசாரித்த போது தான் ரூ.500க்கு குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்தது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக ஸ்ரீரங்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பும், ஸ்ரீரங்கத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!