நாட்டில் இன பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஜனாதிபதி: அனுர எம்.பி குற்றச்சாட்டு August 21, 2023 9:30 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் மற்றும் பௌத்த சிங்கள சமூகத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளை ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் மேற்கொள்கின்றனர். எனவே நாம் பொய்யான பிளவுகளுக்குப் பதிலாக உண்மையான பிளவுகளை சமூகமயப்படுத்தல் வேண்டுமெனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.காலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் சமூகத்தைச் சிங்களம், தமிழ் என பிரித்தனர். அவ்வாறான செயற்பாடுகள் அனைத்து தேர்தலின்போதும் முன்னெடுக்கப்பட்டன.கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அனைத்தும் இயற்கையாக இடம்பெறும் சம்பவங்கள் என்று நினைக்க வேண்டாம். மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் உணவு, ஆடை மற்றும் மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் வைத்தியர்கள் என வெளியில் வந்தனர். தற்போது மீண்டும் அதனை பரிசீலிக்கும் நிலைமை வெளியில் தெரிகின்றன.திடீர் என மகா விகாரையில் தேரவாதம் தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க ஜனாதிபதி சிந்தித்தார். அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது. குருந்தூர்மலையை பாதுகாப்பது யார்? இவ்வாறான பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே பொய்யான பிளவுகளுக்குப் பதிலான உண்மையான பிளவுகளை சமூகமயப்படுத்த வேண்டும்.இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் உண்மைகளை மறைத்து புதிதாகப் பிளவுகளை உருவாக்கினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அவர்களால் உருவாக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினர்களின் கணக்கிலக்கங்களுக்கு ஒரே தடவையில் பணம் செலுத்தப்பட்டமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளியானது. அவர்களே அதனை உருவாக்கினர். மேலும், மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும், குரோதங்களையும் ஏற்படுத்தி நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயற்சி செய்யும் நாடகமாகும்.அன்று எதிரிகள் என கூறியவர்கள் இன்று நண்பர்களாக மாறியுள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்கள் நாட்டின் ஆட்சி, அதிகாரங்கள் யாரிடம் இருந்தது. ராஜபக்ச மற்றும் ரணிலிடமே இருந்தது.நாடு வங்குரோத்து அடைந்து, நாட்டு மக்கள் துன்பத்தில் வாழும் போது அந்த மக்களுக்காக மனசாட்சிக்கு ஏற்ப உதவ முன்வருவதே உண்மையான பிரஜை ஒருவரின் கடமையாகும். எனினும் இன்றைய ஆட்சியாளர்களிடத்தில் அவ்வாறான பண்புகள் இல்லை என தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…