பிணைத்தொகை கிடைக்காததால் பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற கடத்தல் கும்பல்

உத்தர பிரதேசத்தில் கடத்தப்பட்ட பள்ளி முதல்வர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் பத்கானில் உள்ள பாரமவுன்ட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சுபாஷ் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்ட கடத்தல்காரரர்கள், 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் பணம் கொடுக்கவில்லை. காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுபாஷை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், மோரா கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுபாஷ் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மார்பில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது. எனவே, கடத்தல்காரர்கள் பிணைத் தொகை கிடைக்காத ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!