விபத்துக்கள் அற்ற மாகாணத்தை உருவாக்குவோம் – பா.டெனிஸ்வரன்

எனது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்றவேண்டும் என பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

எமது போக்குவரத்து சேவையினை ஏனைய மாகாணங்கள் திரும்பி பார்க்க வேண்டும், அதனைப் பார்த்து ஏனையவர்கள் பின்பற்ற வேண்டும் என்பது எனது இலட்சியங்களில் ஒன்று.

இதற்காக இரவுபகலாக பாடுபட்டு நியதிச்சட்டம் உருவாக்கி அதன் ஊடாக போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கி இருந்தேன்.

பிழை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு அந்தச்சட்டத்தில் இடமிருக்கின்றது. பல்வேறு strategy work Plan செய்து வைத்திருந்தேன் .

அவையனைத்தும் தற்போது முதலமைச்சரின் கைகளில் உள்ளன. அனைத்தும் வெறுமனே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எம்மில் சிலர் தானும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட்டார்கள். இது எமது இனத்தின் சாபக்கேடு. வீதி விபத்தினால் இன்று எமது மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஒரு உயிரை இழந்து கொண்டு இருக்கின்றோம்.

இதைபார்த்துக் கொண்டு இப்படியே இருக்கப் போகிறோமா? சாரதிகளின் கவனக்குறைவு என்று காரணம் கூறப்போகின்றோமா? தங்கள் பிள்ளைகளையும் உறவுகளையும் இழந்து பரிதவிக்கும் குடும்பங்களின் வேதனையை உங்களால் உணரமுடியவில்லையா? தயவு செய்து விடயத்துக்கு பொறுப்பாக இருக்கும் முதலமைச்சரும், அதிகாரிகளும் அடிமட்டத்துக்கு இறங்கி அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சி செய்யுங்கள்.

இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக்கப்போகின்றோம். செய்ய முடியாவிட்டால் அமைச்சு பொறுப்பை தரவேண்டாம் தயவு செய்து ஒரு அனுமதியைத் தாருங்கள் இரவுபகலாக நின்று வேலை செய்து தருகிறேன்.

2015 ஆம் ஆண்டு யாழ்மாவட்டத்தில் உயிரிழந்த 5 வயது சுவஸ்திகன் என்ற மாணவனின் மரணம் இன்னும் என்மனதில் ஆறாத வலியாக பதிந்துள்ளது. தயவு செய்து சிந்தித்து செயற்படுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!