நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராயப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதிக்கு அமையவே காணி விடுவிப்பு இடம்பெறும் என இராணுவம் முன்னதாக அறிவித்திருந்தது.இதற்கமைய, குறித்த நிதி கிடைக்கப் பெற்றதும் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!