சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றிரவு சிறிலங்கா வந்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒட்சுனோரி ஒனோடெரா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று காலை சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிறிலங்கா- ஜப்பான் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!