இன்று வியட்னாம் பயணமாகிறார் சிறிலங்கா பிரதமர்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் நாள் ஹனோயில் ஆரம்பமாகவுள்ள இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கின் தொடக்க நாள் நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் உரையாற்றவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கடந்த 2016ஆம் ஆண்டு, சிங்கப்பூரிலும், 2017ஆம் ஆண்டு சிறிலங்காவிலும் நடைபெற்றிருந்தது.

மூன்றாவது கருத்தரங்கு இம்முறை வியட்னாமில் நடைபெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!