அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்க, வியட்னாம் சென்றுள்ள நிலையிலேயே, சிறிலங்கா பிரதமரும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரும் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தோ- பசுபிக் பிராந்திய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!