வடக்கு, கிழக்கைப் பிரிக்கவே சிங்களக் குடியேற்றம்!

?????????????????????????????????????????????????????????
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமானது என்பதால் தான், முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டது என்று மகாவலி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்த காமினி திஸநாயக்கவின் செயலாளராக இருந்த குணரட்ன ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“குணரட்ன ஒரு புத்தகத்தில் தாங்கள் ஏன் இங்கு சிங்கள குடியேற்றங்களை செய்தோம், எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை அமைத்தோம் என்பதை விளக்கியுள்ளார் என்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!