ஞானசார தேரரின் காவியைக் களைய உரிமையில்லை! – பொது பலசேனா

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் ஞானசார தேரரின் காவி உடையைக் களைய சிறை அதிகாரிகளுக்கு உரிமையில்லை, புத்த தர்மத்தின் படி தனது காவி உடையை பாதுகாத்துக் கொள்ள ஒரு பிக்குவுக்கு உரிமையுண்டு என பொது பல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விதாரனந்தே தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சிறைவாசத்தின்போது தனது உடையை தக்க வைத்துக்கொள்ள ஞானசார தேரருக்கும் உரிமையுண்டு, எனினும் ஞானசார தேரரை திட்டமிட்டே பழிதீர்த்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!