மனித படுகொலைகள் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்ட முடியாது – திஸ்ஸவிதாரண

போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தினரை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவுள்ள கோரிக்கையை ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும், மனிதப்படுகொலைகளுக்கும் முழுமையாக இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது.

எனவே இராணுவ வீரர்கள் மீதான யுத்தக்குற்றசாட்டுக்களை நீக்குமாறு ஜனாதிபதி கோரவுள்ளதாக தெரிவித்துள்ளமை வரவேற்க்கத்தக்கதாகும் என லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாரு கோரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!