ஸ்ரீலங்கன் விமானங்களில் இனி முந்திரிப் பருப்பு கிடைக்காது!

நாய் கூட சாப்பிட முடியாத முந்திரிப்பருப்பு தனக்கு விமானத்தில் பரிமாறப்பட்டமதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியதை அடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையில், பயணிகளுக்கு முந்திரி பருப்பு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.தற்காலிக அடிப்படையில் பயணிகளுக்கு முந்திரிப் பருப்பு வழங்குவதனை ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள முந்திரிப் பருப்புகளை அகற்றவும், இதுவரையில் முந்திரிப் பருப்பு விநியோகம் செய்த டுபாய் நிறுவனத்திடமிருந்து இனி அதனைக் கொள்வனவு செய்வதில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!