முற்றிலும் வேறுபட்ட புதுவித யுக்தியில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் பரபரப்பு..!!

இந்தியாவில், தூத்துக்குடி கோரளம் பள்ளத்தில் அரச ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த தமிழ்ச்செல்வி, மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்சித்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரின் கணவர் செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தமிழ்ச்செல்வி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிமுடிந்த வீட்டிற்கு வந்த அவர் 2 நாட்களாகியும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டுக்கதவை நீண்ட நேரம் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

பின்னர், வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிஸார், தமிழ்ச்செல்வி தன் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏற்கனவே ஒருமுறை தமிழ்ச்செல்வி தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டார்.

எனவே, பாலியல் தொல்லை காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!