அரசுக்கு முண்டு கொடுப்பதற்கு கால எல்லை வகுக்க வேண்டும்! – சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணை போவதற்கு காலஎல்லை வகுக்க வேண்டு என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா.மனித உரிமைப்பேரவை மற்றும் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி தீர்வை எட்டவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணைபோவதற்கு கால எல்லை வகுக்கவேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் மற்றும் ஐ.நா.விற்கான அதிகாரிகள் இங்கு வந்து செல்கின்றபோதும் இலங்கை அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையிலேயே உள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!