புளோரன்ஸ் புயலில் கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் பலி!

அமெரிக்காவின் கரோலினாவை தாக்கிய புளோரன்ஸ் புயல் காரணமாக கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வில்மிங்டனில் உள்ள அவர்களது வீட்டின் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் தமது டுவிட்டர் செய்தி மூலம் இதனை உறுதி செய்துள்ளதுடன் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இது தவிர மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்ப்ஸ்டெட் நகரில் பெண்ணொருவர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்ததும் அவசரசேவை பிரிவினர் அப்பகுதிக்கு செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் வீதிகளின் குறுக்கே மரங்கள் முறிந்து வீழ்ந்து கிடந்ததால் அவர்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை .

பின்னர் அவர்கள் அங்கு சென்றவேளை அந்த பெண்மணி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!