கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பிளவு ; வாசுதேச நாணயகார

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும். என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார தெரிவித்தார்.

அத்தோடு நாட்டின் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொண்ட ஒருவரையே மஹிந்த களமிறக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் இன்று சர்வதேச விவகாரமாகி விட்டது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் மஹிந்த தலைமையில் பொது எதிரணியின் உறுப்பினர்களின் விசேட சந்திப்பு இடம் பெறவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ளும் சாத்தியப்பாடு காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!