ஜெனிவாவைக் குழப்ப கிளம்பியது சரத் வீரசேகரவின் குழு!

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று நேற்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இராணுவத்தினர் சார்பில் ஜெனிவாவில் நாளை உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதெனவும், தாம் அங்கு ​4 ஆவது தடவையாக உரையாற்ற போவதாகவும் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அமர்வில் டுபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கையரை பிரதிநிதித்துவப்படும் குழுக்கள் இரண்டும் கலந்து கொண்டு இராணுவ தரப்பு நியாயங்களை எடுத்துரைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஜெனிவா அமர்வுகளில் கடந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர், பக்க அமர்வுகளின் போது குழப்பங்களை விளைவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!