இலங்கைக்கு வரும் ஆபத்தான இறால்!!


மனிதர்களுக்கு ஆறு வகையான ஆபத்துகளை விளைவிக்கும், ஆபத்தான நோய்களை உருவாக்கும், இறால் இனம் ஒன்று இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

வன்னமீ எனப்படும் இறால் வகை நாளை இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது என்று இலங்கை நீர்வள அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள சட்டங்களை மீறி இந்த இறால் வகை, நாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இலங்கையில் இதுவரையில் இந்த வகையான இறால் வளர்க்கப்படாத நிலையில் அதில் 6 வகையான ஆபத்தான நோய்கள் உள்ளன என்று திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இறால் வளர்ப்பைத் தடுக்கும் வகையில், இலங்கைக்குள் அதனை கொண்டு வருவதனை தடுக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.