பொறுப்புக்கூறலில் இருந்து சிறிலங்கா தப்பிக்க முடியாது – ஐ.நா பேச்சாளர்

போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் சிறிலங்கா ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம்.

இது குறித்து தொடர்ந்தும் சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!