மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தி, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், அடுத்த கட்டம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுப்பார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க,
“சபாநாயகர் அனுப்பிய பிரேரணை கிடைத்ததும், சிறிலங்கா அதிபர் அரசியலமைப்புக்கு அமைய நடவடிக்கை எடுப்பார். அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயற்படமாட்டார். சட்டத்தைப் பின்பற்றுவார்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, தற்போதைய அமைச்சரவை பதவியில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!