மகிந்த வீட்டுத் திருமணத்தில் பங்கேற்காத பசில் – விரிசல்கள் அதிகரிப்பு?

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் திருமணம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த திருமண விழாவில், மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பிரச்சினை இருந்தாலும் குடும்ப நிகழ்வில் ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்வது வழமை. எனினும் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள தீவிர பதவி மோதலே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!