காஸ்மீர் தாக்குதலிற்கு உரிமை கோரும் இளைஞனின் வீடியோ வெளியானது

இந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலிபானின் வெற்றியினால் உந்தப்பட்டு தற்கொலைகுண்டுதாரியாக மாறவிரும்பினான் என தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

.புல்வாமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலிற்கு உரிமை கோரும் இளைஞனின் வீடியோக்கள் வெளியாகியுள்ளன

குறிப்பிட்ட இரு வீடியோக்களும் அடில் அஹமட் டாரினை தாக்குதலை மேற்கொண்ட மாவீரனாக சித்தரித்துள்ளன

தாக்குதலிற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களே வெளியாகியுள்ளன. குறி;ப்பிட்ட வீடியோவில் தோன்றும் இளைஞன் ஒருவன தனது பெயர் அடில் அஹமட் தார் என தெரிவிக்கின்றான்.

இந்திய காவல்துறையினர் குறிப்பிட்ட நபரே வெடிமருந்துகள் நிரம்பிய வாகனத்தை செலுத்தினார் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வீடியோவில் அந்த இளைஞன் துப்பாக்கிகளுடன் காணப்படுகின்றான் அவனை சுற்றியும் பல துப்பாக்கிகள் காணப்படுகின்றன. இதுதவிர கைக்குண்டுகள் ரவைகளும் காணப்படுகின்றன

வீடியோக்களின் பின்னணியில் ஜெய்சி- முகமட் அமைப்பின் பதாகைகளை காணமுடிகின்றது.

ஒருவருட காலமாக காத்திருந்த பின்னர் நான் நினைத்ததை செய்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது, என அடில் அஹமட் டார் தெரிவிக்கி;ன்றான்.

இந்த வீடியோ உங்களை வந்தடையும் வேளை நான் சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்பேன்-இது காஸ்மீர் மக்களிற்கான எனது இறுதி செய்தி எனவும் அடில் அஹமட் டார் தெரிவிப்பதை காணமுடிகி;ன்றது.

காஸ்மீர் இளைஞர்களை இந்தியாவிற்கு எதிராக புனிதப்போரில் ஈடுபடுமாறும் அடில் அஹமட் டார் தெரிவிப்பதை கேட்கமுடிகின்றது.

இரண்டாவது வீடியோவில் அடில் டார் இஸ்லாமிய மதத்திற்காக தான் மரணித்ததை ஒரு திருமணத்தை கொண்டாடுவது போன்று கொண்டாடுமாறு தனது குடும்பத்தவர்களை கேட்டுக்கொள்கின்றான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!