மாற்றுத்திறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து குலுக்கி வரவேற்ற முதலமைச்சர் பினராயி விஜயன்!

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் என்பவர், முதலமைச்சரின் பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார். அங்கு முதலமைச்சரை சந்தித்த அவர், தனக்கு ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த ஒரு தொகையை பேரிடர் நிவாரண தொகையாக வழங்கினார்.

அப்போது இளைஞரின் கால்களை பிடித்து முதலமைச்சர் குலுக்கினார். பின்னர் இளைஞருடன் கலந்துரையாடினார். அந்த இளைஞர், கால் விரல் உதவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பிரணவுடனான சந்திப்பை நெகிழ்ச்சி மிகுந்த தருணம் என கூறி முதலமைச்சர் பினராயி விஜயன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!