இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்ததன் பின்னர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கை தற்போது தெற்காசியாவில் உயர் மனித அபிவிருத்தி சுட்டியுடன் கூடிய நடுத்தர வருமானம் பெறும் நாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹார்விட் ஷேபர் இந்த விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி டபிள்யு.டி லக்ஷ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!