பிறந்து 30 மணி நேரத்தில் குழந்தையை தாக்கிய கொரோனா வைரஸ்! கடும் அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு பிறந்த குழந்தைக்கு பிறந்து 30 மணி நேரத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வுகானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கே இவ்வாறு வைரஸ் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு தாயிடம் இருந்து நேரடியாக பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு தாயை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கடுமையாக மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் பிறந்த 30 மணி நேரத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட்டதை சோதனையில் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!