தம்மீதான மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவிக்கின்றார்
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார்
இதேவேளை, தலைமைத்துவத்திற்காக மோதிக் கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு, எதிர்க் கட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என அனுரகுமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!