பதுளையில் செந்தில் தோல்வி! – வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி.

நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பதுளை மாவட்டத்தில் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, அந்தக் கட்சியின் சார்பில் சுதர்சன தெனிபிட்டிய 71,766 வாக்குகளையும், தேனுக விதானகமகே 68,338 வாக்குகளையும், சாமர சம்பத் தசாநாயக்க 66,393 வாக்குகளையும், டிலான் பெரேரா 53,081 வாக்குகளையும் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி 50,151 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் வடிவேல் சுரேஸ் 49,762 வாக்குகளையும், அரவிந்தகுமார் 45,491 வாக்குகளையும் சமிந்த விஜேசிறி 36,291 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!