17 இற்கு ஆதரவு- 20இற்கு எதிர்ப்பு!

20ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது பிரிவான இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம்.முஷாரப் வாக்களித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இவர் எதிராக வாக்களித்த நிலையிலேயே குறித்த உப பிரிவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என குறித்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன்போது 157 பேர் ஆதரவாகவும் 64 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!