மன்னாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கிராம அலுவலர்கள் – ஒருவரை காணவில்லை

மன்னார் – நானாட்டான், தோமஸ்புரி கிராம அலுவலர் ஆற்றில் நீராடிய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

மன்னார் அரிப்பு பாலப்பகுதியின் கீழ் அருவி ஆற்றில் ஐந்து கிராம அலுவலர்கள் உட்பட 6 பேர் நேற்று மாலை நீராடியுள்ளனர். இதன் போது அதிக நீர் வரத்து காரணமாக அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

விடயம் அறிந்த மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்ட நிலையில் நான்கு கிராம அலுவலர்கள் உட்பட ஐவர் மீட்கப்பட்டனர்.

எனினும் தோமஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர் இது வரை மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!