பணிக்கு வரமாட்டோம்! – அதிபர், ஆசிரியர் சங்கங்கள் முடிவு.

இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காது இருக்க அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று முதல் அனைத்து அதிபர், ஆசிரியர்களும் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும் என நேற்றைய தினம் கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!