அருட்தந்தையிடம் 7மணிநேரம் விசாரணை! – இன்றும் வருமாறு அழைப்பு. November 16, 2021 11:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரிடம் நேற்று 7 மணித்தியாலங்களுக்கும் மேலாக சிஐடி அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இணையத்தள கலந்துரையாடலொன்றின் போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அருட் தந்தை சிறில் காமினி அதிகளார் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக நேற்று அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (சி. ஐ. டி ) அழைக்கப்பட்டிருந்தார்.காலை 9.45 மணியளவில் சி. ஐ. டி. க்கு சட்டத்தரணிகள் மூவருடன் அருட் தந்தை சிறில் காமினி வருகை தருவதற்கு முன்னரிருந்து வெளியே வரும் வரையில் 50 க்கும் அதிகமான அருட் தந்தையர்கள் சிலரும் அருட் தந்தை சிறில் காமினிக்கு ஆதரவு தெரிவித்து அணித்திரண்டிருந்தனர்.நேற்று வாக்கு மூலமொன்றை பெற்ற நிலையில் மீண்டும் இன்று காலை 9.30 மணிக்கு வரும்படி குற்றவியல் விசாரணை அதிகாரிகள் என்னை அழைத்துள்ளனர்என்று அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…