நாட்டை நாசம் செய்யவே சீன அமைச்சர்கள் வருகிறார்கள்! January 11, 2022 11:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சீன அமைச்சர்களுக்கு வேறு வேலையில்லை, நாட்டை நாசம் செய்யவே இங்கு வருகின்றார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சீன அமைச்சர்களுக்கு அந்நாட்டில் வேலையில்லை. மாதத்துக்கு ஒருமுறை எவராவது சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றார். பெரிய நாடான சீனாவிலிருந்து கொண்டு இலங்கைக்கு ஏன் இவர்கள் வந்து திரிகின்றார்கள் என தெரியவில்லை.சீனாவின் வெளி விவகார அமைச்சரை வரவேற்பதற்கு இலங்கையின் வெளி விவகார அமைச்சர் செல்லவில்லை. மாறாக விளையாட்டுத்துறை அமைச்சரே சென்றார். இதற்குக் காரணம் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களே.தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்காகவே சீனாவின் அமைச்சர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். யார் வந்தாலும், யார் வரவேற்றாலும் இலங்கையின் மேலுள்ள அன்பால் அவர்கள் எவரும் வரவில்லை. எஞ்சியிருப்பதையும் நாசம் செய்யவே இவர்களை இலங்கைக்கு அழைத்து வருகின்றார்கள்.நாம் அந்த ஆட்சியிலிருந்தோம். ஆனாலும் தவறுகளுக்குப் பொறுப்புக்கூற முடியாது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெறும்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எம்மிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…