எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் விஜயம்…!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை யாழ்ப்பாணம் தையிட்டியில் முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

“றாகம” நிறுவனத்தின் அணுசரனை ஊடாக நோர்வே HETLAND பல்கலைக்கழக மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த கட்டிடம் இன்றையதினம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமா சந்திரபிரகாஸ், மாவட்ட அமைப்பாளர் வ.பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!